அய்யலூர், மே 25: அய்யலூர் அருகே கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அய்யலூர் அருகே சுக்காம்பட்டி பகுதியில் பனைமரக் கள் விற்கப்படுவதாக வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் சுக்காம்பட்டி பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.
இதில் அதே பகுதியை சேர்ந்த காளிசாமியின் மகன் நாகராஜ் (40), அவரது தோட்டத்தில் பனை மரக்கள் இறக்கி விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவர் பதுக்கி வைத்திருந்த 5 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.