களக்காடு,அக்.29: களக்காடு அருகே அரிவாளை காட்டி மிரட்டி டிரைவரிடம் பைக் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். களக்காடு அருகே கீழக்கருவேலங்குளம், கட்டார்குளத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (41). டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது பைக்கை வீட்டு முன் நிறுத்தி விட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர், முத்துராஜின் பைக்கை திருட முயற்சி செய்தார். இதைப்பார்த்த முத்துராஜ் தடுத்தார். இதனைதொடர்ந்து மர்ம நபர் அரிவாளை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி, முத்துராஜின் பைக்கை பறித்து சென்று விட்டார். இதுகுறித்து முத்துராஜ் களக்காடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்.