திருவாடானை, ஏப்.14: திருவாடானையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு கலைக் கல்லூரி வளாக கட்டிடத்தின் மேற்கூரையில் கடந்த சில நாட்களாக தேனீக்கள் கூடு கட்டியதால் அங்கு கல்வி பயிலும் மாணவ- மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் விரட்டி விரட்டி தொல்லை கொடுத்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக அந்த அரசு கலைக் கல்லூரி நிர்வாகத்தினர் திருவாடானை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அந்த கல்லூரி வளாக கட்டிடத்தின் மேற்கூரையில் கூடு கட்டி இருந்த தேனீக்களை தீ வைத்து அழித்து விட்டனர்.