அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் ஆண்கள் கல்லூரியில், பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் பூந்தமல்லியை சேர்ந்த ராஜனுக்கும், சக மாணவனான வில்லிவாக்கத்தை சேர்ந்த முருகனுக்கும் நேற்று முன்தினம் வகுப்பறையில் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருந்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். …