செங்கல்பட்டு: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அசோக்குமார் (23). இவர், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றார். தனது செல்போனை ஒருவர் பறித்து சென்றதாக மறைமலைநகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த மறைமலைநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை அம்பத்தூரை சேர்ந்த சஞ்ஜய் (22) என்பவரை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செல்போன் திருட்டு சம்பவத்தில் கைதான இவர் ஏற்கனவே வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.