திருக்காட்டுப்பள்ளி, ஏப்.23: கல்லணை அருகே கார் மோதி பைக்கில் சென்ற 3 பேர் படுகாயம் அடைந்தனர். கல்லணை அருகே திருச்சினம்பூண்டி பிள்ளையார் கோவில் அருகில் கிழக்கு நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து திருக்காட்டுப்பள்ளியில் இருந்து பைக்கில் கோவிலடி நோக்கி வந்த கோவிலடி திருவள்ளுவர்புரத்தை சேர்ந்த கண்ணதாசன் மகன் கரன் (20). அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார், சாம்சன் ஆகிய 3 பேர் மீது மோதியது.இதில்3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து கரன் தோகூர் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த எஸ்ஐ முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார்.