Thursday, May 16, 2024
Home » கல்குவாரி நீரில் மூழ்கி 3 குழந்தைகள் பலி:காப்பாற்ற முயன்ற பாட்டியும் சாவு

கல்குவாரி நீரில் மூழ்கி 3 குழந்தைகள் பலி:காப்பாற்ற முயன்ற பாட்டியும் சாவு

by kannappan

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம் மனைவி புஷ்பா(60). இவர்களுக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் உள்ளனர். புஷ்பாவின் மகள் விஜயஸ்ரீ மற்றும் அவரது கணவர் சாமிநாதன்(லாரி ஓட்டுனர்) ஆகியோர் தென்களவாய் கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள் வினோதி(13) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் மற்றொரு மகள் ஷாலினி(10) 5ம் வகுப்பு படித்து வந்தார். மகன் கிருஷ்ணன்(8) மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், தனது குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் விஜயஸ்ரீஅவரது தாயார் புஷ்பா வீட்டிற்கு 3 குழந்தைகளையும் அனுப்பி உள்ளார். நேற்று மதியம் பாட்டி புஷ்பா 3 குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள செயல்படாத கல் குவாரியில் துணி துவைத்து விட்டு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது பேரக்குழந்தைகள் வினோதினி, ஷாலினி, கிருஷ்ணன் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளனர். எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி 3 பேரும் தத்தளித்த படி உயிருக்கு போராடி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பா உடனே கல்குவாரியில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதனிடையே சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது, குழந்தைகள் மற்றும் மூதாட்டி ஆகியோர் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே தண்ணீரில் குதித்து அவர்களை தேடினர்.நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு புஷ்பா மற்றும் வினோதினி, ஷாலினி, கிருஷ்ணன் ஆகிய 4 பேரையும் சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

You may also like

Leave a Comment

two + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi