திருத்துறைப்பூண்டி, மார்ச் 8: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவி களுக்கான கட்டுரைப்போட்டி நடைபெற்றது. இதில் பள்ளங்கோயில் புனித ஜான் டீ பிரிட்டோ அரசு உதவிபெறும் பள்ளி மாணவி ஹரிணி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பரிசும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி வழங்கினார்.
பரிசு பெற்ற மாணவி ஹரிணி, உடற்கல்வி ஆசிரியர் நியூட்டன் ஆகியோரை தாளாளர் தந்தை அமிர்தராஜ் அடிகளார், தலைமையாசிரியர் ஜேம்ஸ்ராஜ் மற்றும் இருபால் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.