தூத்துக்குடி, ஜூன்12: தூத்துக்குடியில் கலைஞரின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு என்.பெரியசாமி அறக்கட்டளை மற்றும் மகளிர் திட்டம் ஒருங்கிணைப்புடன் முள்ளக்காடு ஊராட்சி பொட்டல்காடு கிராமத்தில் 32 பெண்களுக்கு 40 நாட்கள் இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டு இலவச தையல் இயந்திரத்துடன் சான்றுகளும் மற்றும் தையல் பயிற்சி பெற்ற 68 பெண்கள் என மொத்தம் 100 பேருக்கு தையல் இயந்திரம் வழங்கும் விழா கலைஞர் அரங்கில் நடந்தது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமை வகித்தார். விழாவில் கனிமொழி எம்.பி பேசுகையில், ‘கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி 100 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். மக்களுக்கான சமூகநீதிக்காக தொடர்ந்து கலைஞர் உழைத்தார்.
திராவிட இயக்கத்தில் பெண்களின் உரிமைக்காகவும் எல்லோரும் சமமாக வாழவேண்டும் என்பதற்காகவும் சட்டம் இயற்றினார். 10ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு திருமண உதவி வழங்கப்பட்டது. தற்போது கல்லூரி படிப்பை தொடர ரூ.1000 வழங்கப்படுகிறது. அதே போல் கலைஞர் ஆட்சியில் தான் மகளிர் சுய உதவிக்குழு ஆரம்பிக்கப்பட்டது. உலகத்தில் நடப்பதை இல்லத்தில் இருந்து தெரிந்து கொள்ள தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டதுடன், அடுப்பூதிய பெண்களுக்கு காஸ் ஸ்டவ் வழங்கப்பட்டது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒருவருடம் கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது. அதை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்’ என்றார்.
விழாவில் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவர் அணி துணை செயலாளர் துறைமுகம் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர துணைச் செயலாளர் கீதாமுருகேசன், மாநகர அவை தலைவர் ஏசுதாஸ், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் வைதேகி, சரவணக்குமார், சரண்யா, ஜாக்குலின் ஜெயா, மகேஸ்வரி, மரியகீதா, ஜெயசீலி, அந்தோணிபிரகாஷ், சுப்புலட்சுமி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டச்செயலாளர்கள் மூக்கையா, செல்வமாரியப்பன், கங்காராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.