பெரம்பலூர்,மே23: பெரம்பலூர் அருகே எசனை கிராம த்தில் ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து மூனே கால் பவுன் நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை திடிடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந் தவர் விஸ்வநாதன் மகன் சுரேஷ்(40)இவரது மனைவி மீனாட்சி(36). இவர்களது பி ள்ளைகள் தக்க்ஷயா(10) மகிலேஷ்(8). சுரேஷ் கார்பெண்டர் வே லை செய்துகொண்டு தன து குடும்பத்துடன் மேற்படி முகவரியில் உள்ள வீட்டில் கடந்த ஆறு மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு 7 மணிக்கு மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஆத்தூ ரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று பிள்ளைக ளை அங்கேயே விட்டுவிட் டு பின்னர் தனது மனைவி யுடன் மீண்டும் நேற்று(22 ஆம்தேதி) ஆலை 4:45 மணி க்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின்பூட்டை உடை த்து உள்ளே இருந்த இரும் பு பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த மூன்றேகால் பவுன் நகை மற்றும் ரூ5ஆ யிரம் ரொக்கப்பணம் திரு டு போயிருப்பது தெரியவந் தது. இதுகுறித்து கிடைத்த புகாரின்பேரில் பெரம்பலூ ர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.