இத்திட்டத்திற்கு நிலம் ஆஜிதம் செய்ய கடந்த 2011ம் ஆண்டில் நிலத்தை அளந்து அடையாள கல் நடப்பட்ட இடங்களுக்கு இதுவரை தொகையும் தரப்படவில்லை. நிலமும் பதிவு செய்யப்படவில்லை. ரயில்வே நிர்வாகம் அளந்து எடுத்துள்ளதால் மற்றவர்களிடம் நிலத்தை விற்கவும் முடியவில்லை. அரசாங்கமும் 2011ம் ஆண்டு முதல் இன்று வரை பணமும் கொடுத்தபாடில்லை. இதனால் தங்களின் வாழ்வாதாரம் முடங்கி தனது பெண் முப்பது வயது ஆகியும் திருமணம் செய்ய முடியாமல் வீட்டில் முடங்கி கிடப்பதாக பாலசுப்பிரமணியன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. நிலம் கையகப்படுத்த மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை என்றும், நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும் பட்சத்தில் இந்த பணியை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகம் தயாராக இருக்கிறது என்று கூறுவதாக ரயில் பயணிகள் நல சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்,