தர்மபுரி, மார்ச் 24: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தோட்டாதனஹள்ளி முனியப்பன் கோயில் அருகே வட்டாட்சியர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கற்களை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டரை நிறுத்துமாறு சைகை செய்தனர். அதிகாரிகளை பார்த்ததும் டிராக்டரை நிறுத்திவிட்டு அதில் வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். விசாரணையில் கற்கள் கடத்தி வந்தது தெரிய வநதது. இதையடுத்து, ஒரு யூனிட் கற்களுடன் டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாலக்கோடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கற்கள் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்
previous post