சென்னை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தலைமையில் நேற்று மண்டல பொறுப்பாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் அமமுக வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் ஜீவாதாரமாக விளங்கும் காவிரி நதி நீரில் நமக்குரிய பங்கினைத் தராமல் பல்வேறு காலக்கட்டங்களில் கர்நாடகா வஞ்சித்து வருகிறது. இப்போதும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று அடம்பிடித்து, அரசியலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதித்து அதற்கான நிதி ஒதுக்கியிருக்கிறது.இதனைக் கண்டித்தும், மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமமுக சார்பில் வருகிற 14ம் தேதி காலை 11 மணி அளவில் திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த ஆர்ப்பாட்டத்துக்னு தலைமையேற்க இருக்கிறார். மாவட்ட வாரியாக அமமுக ஆலோசனை கூட்டம்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: அமமுக மாவட்டங்கள் வாரியான ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டங்கள் வரும் மார்ச் 18ம் தேதி தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட ஆலோசனை கூட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் சென்னை, திருவள்ளூர் கிழக்கு, மதியம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களிலும் நடைபெறும். இக்கூட்டங்களில் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்று அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வரும் கட்சிப் பணிகளை ஆய்வு செய்வார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….
கர்நாடக அரசுக்கு எதிராக வரும் 14ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம்: அமமுக அறிவிப்பு
previous post