வேலாயுதம்பாளையம், ஏப். 4: புகளூர் மேம்பாலம் அருகே உள்ள பிரிவு சாலையில் இருபுறமும் ஏராளமான மரங்களும் செடி கொடிகளும் முளைத்திருந்தது. கடும் வெயிலின் தாக்கம் காரணமாக செடி, கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் திடீரென காய்ந்திருந்த செடி, கொடிகளிலும், அங்கு கொட்டி கிடந்த கழிவுகளிலும் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்து அருகில் இருந்த மரங்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. கடும் வெயிலின் தாக்கம் காரணமாக தீகொழுந்து விட்டு வேகமாக எரிய ஆரம்பித்தது.
இதுகுறித்து வேலாயுதம் பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை போராடி தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதேபோல் நொய்யல் அருகே குறுக்கு சாலை வழியாக நொய்யல் ஆற்று பகுதிகளில் உள்ள செடி, கொடிகளிலம் தீ பிடித்து எரிந்தது. தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்து கட்டுப்படுத்தி பக்கத்தில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது