சேந்தமங்கலம், ஜன.5: கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த கரூர் வாலிபர் கார் மோதி பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். கரூர் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் சந்தோஷ்குமார்(22). தனியார் செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர் ஜெகதீசன்(20) என்பவருடன் டூவீலரில் கொல்லிமலைக்கு கடந்த 31ம் தேதி சுற்றுலா சென்றார். அப்போது டூவீலரை ஜெகதீசன் ஓட்ட, சந்தோஷ்குமார் பின்னாள் அமர்ந்து வந்தார். சோளக்காட்டில் இருந்து எட்டுக்கை அம்மன் கோயில் செல்லும் வழியில், சின்னக்கணக்கன்காடு வளைவில் எதிரே வந்த கார், டூவீலர் மீது மோதியதில் ஜெகதீசன், சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் வாலிபர் கார் மோதி பலி
previous post