கரூர், மார்ச்11:கரூர் மாநகராட்சி அலுவலகம் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாவதை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் குடிநீர் தட்டுப்பாடின்றிபொது மக்களுக்கு விநியோகம் செய்ய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் .இதன் அடிப்படையில் கரூர் மாநகராட்சிக்கு பிரதானமாக குடி சப்ளை செய்யும் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கரூர் ஜவகர் பஜார் விநாயகர் கோயில் அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகச் செல்கிறது .இதற்கு மாநகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.