கரூர், ஏப். 15: சட்டமேதை அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் கலைஞர் அறிவாலயத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு கரூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ராஜ்யசபா உறுப்பினர் அப்துல்லா மாலை அணிவித்து மரியாதை செய்து உறுதிமொழி எடுத்தனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி , மேயர் கவிதா கணேசன் துணை மேயர் தாரணி சரவணன், கரூர் சட்டமன்ற பொறுப்பாளர் தினகர்,மாநில சட்ட பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் மணிராஜ், மாநகர செயலாளர் எஸ் பி கனகராஜ், கரூர் மாநகர பகுதி கழக பொறுப்பாளர்கள் கரூர் கணேசன், கரூர் வடக்கு பகுதி கழக செயலாளர் கரூர் கணேசன், வக்கீல் சுப்பிரமணியன், ஆர் எஸ் ராஜா, வி.ஜி. எஸ். குமார், ஜோதி பாசு, மாநகர துணைச் செயலாளர் வெங்கமேடு பாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் எம் எஸ் கருணாநிதி, பூவை ரமேஷ்பாபு ,மகேஸ்வரி, அமைப்பாளர் வெங்கமேடு சக்திவேல், செயற்குழு உறுப்பினர்கள் சாலை சுப்பிரமணியன், காலனி செந்தில், கரூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வி கே வேலுச்சாமி கரூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முத்துக்குமாரசாமி, புகலூர் குணசேகரன், மாநகர துணைச் செயலாளர் அறிவின்ஸ், அமர்ஜோதி எம்.எஸ். பாலாஜி, அவைத்தலைவர் கே வி தங்கவேல் , அங்கு பசுபதி, ராஜலிங்கம் மாமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.