சென்னை: முகலிவாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ். ஆட்டோ டிரைவர். இவருக்கு, திருமணமாகி வினோதினி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த வாரம் சின்ன போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் வினோதினி குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தார். அதன்பிறகு, வீட்டிற்கு திரும்பியவருக்கு தொடர்ந்து வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால், மேல் சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், கடந்த சனிக்கிழமை வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் வினோதினி இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உடலை வாங்க மறுத்துவிட்டனர்.மீண்டும், அவரது உடலை வீடியோ பதிவுடன் கூடிய பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வினோதினி, இறந்து 5 நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ேநற்று அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் முகலிவாக்கம் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். …