கீழக்கரை, டிச.11: மாநில அளவிலான கராத்தே போட்டி கொடைக்கானலில் நடந்தது. இதில் பங்கேற்ற சின்ன ஏர்வாடி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 41 பேர் பல்வேறு பிரிவுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பை வென்றனர். இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் ஹன்சி ரவி கோப்பை வழங்கினார்.சிறப்பான முறையில் பயிற்றுவித்த சிலம்பம், கராத்தே பயிற்றுநர் வாலிநோக்கம் அஹமது மரைக்கான் கோப்பையை வென்ற மாணவர்களை, சின்ன ஏர்வாடி நடுநிலைப் பள்ளி நிர்வாகம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.