Wednesday, May 22, 2024
Home » கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த விவசாயி பலி

கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த விவசாயி பலி

by Karthik Yash

தர்மபுரி, ஏப்.18: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பி.குறிஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (58), விவசாயி. இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த 28ம் தேதி, வீட்டின் அருகே ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்த போது, அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்குள் ஆடு ஒன்று தவறி விழுந்தது. இதனை பார்த்த அன்பழகன், அந்த ஆட்டை காப்பாற்றுவதற்காக கயிறு கட்டி கிணற்றில் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்ததில், அன்பழகன் கிணற்றுக்குள் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் நேற்று உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

3 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi