கம்பம்: கம்பத்தில் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பஞ்சு தீயில் எரிந்து நாசமானது. கம்பத்தில் உள்ள கம்பமெட்டு காலனி அருகே கூடலூரை சேர்ந்த காதர்ஒலி (62) என்பவருக்கு சொந்தமான இலவம் பஞ்சு குடோன் உள்ளது. இந்த குடோனில் நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிதுநேரத்தில் பஞ்சு தீப்பற்றி எரிய துவங்கியது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே கம்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி அழகர்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்தால் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் தீயில் எரிந்து நாசமாகின….
கம்பத்தில் பஞ்சு மில்லில் தீ விபத்து : ரூ.3 லட்சம் பஞ்சு எரிந்து நாசம்
previous post