கோவை, செப். 6: கோவை குமரகுரு தொழில்நுட்பம் கல்லூரியின் ஸ்வாகதம் 2023 என்ற 1400 மேற்பட்ட முதலாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு குமரகுரு நிறுவனங்களின் தாளாளர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். ஸ்வாகதம் மூலம் கல்லூரியின் உள்கட்டமைப்புகள் மற்றும் திறமைகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை பற்றி மாணவர்கள் தெரிந்து கொண்டனர். மேலும், கல்வி இணை பாடத்திட்டம் மற்றும் கூடுதல் பாடத்திட்டத்தை தொடர்ந்து புதுப்பிப்பதன் மூலம் நிறுவனம் அதன் தொலைநோக்கு மற்றும் மாணவர்களை எவ்வாறு படிப்படியாக வளர்த்து வருகிறது என்பதை பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள இது ஒரு தளமாக அமைந்தது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கற்றல் செயல்பாட்டில் கல்லூரிக்கு இணையாக சமமான பொறுப்பை வகிக்கிறார்கள் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. இதில், குமரகுரு நிறுவனங்களில் இணை தாளாளர் சங்கர் வானவராயர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.