சின்னாளபட்டி: கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் மாற்றுத்திறனாளிகள் கழிவறை உள்ளது. இந்த கழிவறையை சுற்றிலும் உடைந்த ஓடுகள், மரங்கள், கழிவு மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் கழிவறைக்கு செல்ல கடும் அவதியடைகின்றனர். இதன் காரணமாக அவர்கள், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் கழிப்பறையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், சீரமைத்து தர வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….