சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் எஸ்எம்சி காலனியை சேர்ந்தவர் யுவராஜ் (27). இவர் களரம்பட்டி அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து பணத்தை பறிக்க முயன்றனர். இதுபற்றிய புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கிச்சிபாளையம் போலீசார், யுவராஜை மிரட்டிய அந்தேரிப்பட்டியை சேர்ந்த காதர்உசேன்(30), எஸ்எம்சி காலனி மொட்டையன் (எ) பூவரசன்(26) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். சேலம் உத்தமசோழபுரம் அரியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(28). இவர் சத்யா நகர் அருகே நடந்து சென்றபோது, அவ்வழியாக டூவீலரில் வந்த இரண்டு பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினர். இதுபற்றி கொண்டலாம்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். அதில், பனங்காட்டு பகுதியை சேர்ந்த ஹரிபிரகாஷ், சேலத்தாம்பட்டி சித்தேஸ்வரன் ஆகியோர் சுரேசை மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கத்தியை காட்டி மிரட்டிய 4 பேர் கைது
previous post