Saturday, May 11, 2024
Home » கணவனை பிரிந்த பெண் தற்கொலை

கணவனை பிரிந்த பெண் தற்கொலை

by Karthik Yash

சேந்தமங்கலம், மார்ச் 14: ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார்(45). இவரது மனைவி பானுப்பிரியா(40). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த சில ஆண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவனை பிரிந்த பானுப்பிரியா, புதுச்சத்திரம் அருகே உள்ள நாட்டாமங்கலத்தில் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், பானுப்பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக கிடந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

eleven − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi