திருச்சி, மார்ச் 26: திருச்சி பாலக்கரை கூனிபஜார் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வெண்ணிலா (34). திருச்சி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வெண்ணிலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.