பல்லடம், ஆக.8:பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையத்தில் பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் சார்பில் 9வது கைத்தறி தினத்தையொட்டி கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று ஸ்ரீராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை சப்.கலெக்டர் ஸ்ருதன் ஜெயநாராயணன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் தேன்மொழி (பல்லடம்), வக்கீல் குமார் (பொங்கலூர்), ஊராட்சி தலைவர் நாகேஷ்வரி சோமசுந்தரம், முன்னாள் ஊராட்சி தலைவர் சொக்கப்பன்,பல்லடம் வட்டாட்சியர் ஜெய்சிங் சிவகுமார், கைத்தறி உதவி இயக்குநர் கார்த்திகேயன், கூட்டுறவு சங்க செயலாளர் சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் சுடர்விழி தலைமையிலான மருத்துவ குழுவினர் கைத்தறி நெசவாளர் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.