விழுப்புரம், மே 12: விழுப்புரத்தில் ரவிக்குமார் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளிடம் பரிசோதனை கட்டணம் வசூலிக்கப்படும் என்ற உத்தரவை கிடப்பில் வைப்பதாக, அந்த மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. உத்தரவை கிடப்பில் வைத்துள்ளதாக கூறும் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வருங்காலத்தில் மீண்டும் அமல்படுத்தக்கூடும். எனவே, கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற உத்தரவை நிரந்தரமாக பின்பற்ற வேண்டும். சுகாதாரம் மக்களின் அடிப்படை உரிமை எனக் கூறி, ராஜஸ்தான் மாநில அரசு சட்டம் நிறைவேற்றியிருக்கிறது. சுகாதாரத்தை மாநிலப் பட்டியலில் வைத்துள்ள தமிழக அரசும் இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், என்றார்.
கட்டணம் வசூலிக்கபடாது என்ற உத்தரவை ஜிப்மர் நிரந்தரமாக பின்பற்ற வேண்டும்
previous post