துரைப்பாக்கம்: சென்னை காரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (35). இவர், ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளராக உள்ளார். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று நீலாங்கரை கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் படகில் தனது குழுவினருடன் சென்றார் அரவிந்த். பின்னர், அங்கு கடலில் குதித்து 60 அடி ஆழத்திற்கு சென்று, தேசியக்கொடியை நட்டு மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து, கரை திரும்பிய அவருக்கு கடற்கரையில் கூடியிருந்த ஏராளமானோர் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்….
கடலில் 60 அடி ஆழத்தில் தேசிய கொடிக்கு நீச்சல் பயிற்சியாளர் மரியாதை
previous post