Thursday, May 16, 2024
Home » கடற்கரையோர கிராமங்களில் கூடுதல் கலெக்டர்கள் திடீர் ஆய்வு: குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண அதிரடி நடவடிக்கை

கடற்கரையோர கிராமங்களில் கூடுதல் கலெக்டர்கள் திடீர் ஆய்வு: குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண அதிரடி நடவடிக்கை

by Ranjith

 

பொன்னேரி, மார்ச் 11: மீஞ்சூர் ஒன்றியத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், வன்னிப்பாக்கம் ஊராட்சிகளில் கடற்கரையோர கிராமங்களில் கூடுதல் கலெக்டர்கள் திடீர் ஆய்வு நடத்தினர்.திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்வு காண கடற்கரையேர கிராமங்களில் நேரில் சென்று ஆய்வு செய்ய திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவை தொடர்ந்து நேற்றுமுன்தினம் கூடுதல் கலெக்டர் என்.ஓ.சுகபுத்திரா, உதவி கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வித்ஸ் (பயிற்சி) ஆகியோர் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில், கூடுதல் கலெக்டர்களை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், துணைத்தலைவர் எம்டிஜி. கதிர்வேல் ஆகியோர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீதேவி நகர் திருவள்ளுவர் நகர், ஊராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை காண்பித்தனர்.

குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகளின் மேலே ஏறி கூடுதல் கலெக்டர்கள் ஆய்வு செய்தனர். அந்த குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை பாட்டிலில் எடுத்து நீரின் நிலை எப்படி உள்ளது என பரிசோதனை செய்து ஆய்வும் செய்தனர். அவர்களுடன் குடிநீர் வாரிய அதிகாரி அமலதீபன், ஊரகதுறை அதிகாரி செந்தில் குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பரணி, குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயகுரு, உதவி பொறியாளர் நந்தகுமார், பணியாளர் சங்கர் மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர் நடராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், ஒன்றிய பொறியாளர்கள் முத்துலட்சுமி, செந்தில் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு சென்று அங்குள்ள ஆழ்துளை கிணறுகளையும் ஆய்வு செய்தனர். அவர்களுடன் ஊராட்சி மன்ற தலைவி கலாவதி ஆழ்துளை கிணறு இடங்களை நேரில் சென்று காண்பித்தார். இதனை தொடர்ந்து, வன்னிப்பாக்கத்தில் உள்ள ஏரி பகுதியில் கூட்டு குடிநீர்காக 24 ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டுள்ளன.

அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வானது தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் நீடிட்டது. இது சம்பந்தமாக அறிக்கை தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட கலெக்டருக்கு உடனடியாக அனுப்பப்பட்டு கோடைகால குடிநீர் பிரச்னைக்கு முழு தீர்வு காணுவதாக கூடுதல் கலெக்டர்கள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

twenty − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi