வருசநாடு, நவ. 4: கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, குமணன்தொழு, வருசநாடு, வாலிப்பாறை, தும்மக்குண்டு,பாலூத்து, சிங்கராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை இரு வேலைகளில் ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு ஓட்ட பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும், இங்குள்ள மாடுகளுக்கு மதிய நேரங்களில் நீச்சல் பயிற்சியும், மாடுகளுக்கு பிண்ணாக்கு, பருத்திப்பால், மூலிகைப்பால், பேரிச்சைபழம், வடிகஞ்சி, வாழைப்பழம், சத்துணவு மாவு உள்ளிட்ட உணவுகளை மாடுகளுக்கு விவசாயிகள் வழங்கி வருகின்றனர்.
இதனால் மாடுகளுக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது. இந்நிலையில் பங்குனி உத்திரம், சித்திரை திருவிழா உள்ளிட்ட திருவிழாக்களில் ரேக்ளா ரேஸ் மாடுகள் கடமலை மயிலை ஒன்றியத்தில் ஓட்டப் பந்தயம் வைப்பது வழக்கம். இதனைத் தொடர்ந்து இப்பகுதிகளில் ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் வாங்க வியாபாரிகள் அதிக அளவில் வருசநாடு பகுதிக்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.