சென்னை: சென்னை அயனாவரம் திக்காகுளம் பகுதியில் நேற்று முன்தினம் திலீப்குமார் (39) என்ற நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்யும் போது அவரிடம் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணிபுரியும் சக்திவேல் மற்றும் மத்திய குற்றப்பிரிவில் பணிபுரியும் செல்வகுமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ரயில்வே பிரிவில் பணிபுரிந்த சக்திவேல் மற்றும் மத்திய குற்றப்பிரிவில் பணிபுரிந்த செல்வகுமார் ஆகிய இருவரையும் நேற்று பணியிடை நீக்கம் செய்து அத்துறையின் அதிகாரிகள் உத்தரவிட்டனர்….