கிருஷ்ணகிரி, செப்.5: பர்கூர் போலீஸ் எஸ்ஐ குட்டியப்பன் மற்றும் போலீசார், கோடியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிக்கொண்டிருந்த முதியவரை பிடித்து விசாரித்தனர். அவர் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ்(62) என்பதும், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.