ஓசூர், மார்ச் 7: ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், ஓசூர் டவுன் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே, நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், டூவீலரில் இருந்தவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(22), திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த கார்த்திக் (36) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது
previous post