Tuesday, June 11, 2024
Home » கங்குலிக்கு திடீர் மாரடைப்பு: கொல்கத்தாவில் தீவிர சிகிச்சை

கங்குலிக்கு திடீர் மாரடைப்பு: கொல்கத்தாவில் தீவிர சிகிச்சை

by kannappan

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (48). இந்திய அணிக்காக (1992 – 2008) மொத்தம் 113 டெஸ்டில் 7212 ரன், 311 ஒருநாள் போட்டிகளில் 11,363 ரன் மற்றும் 100 விக்கெட் எடுத்துள்ளார். இப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக உள்ளார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  நேற்று காலை வழக்கம்போல் வீட்டிலேயே ‘டிரெட் மில்’ பயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கங்குலி மயங்கி விழுந்தது தெரிய வந்தது. ரத்தக் குழாயில் 3 இடங்களில் உள்ள அடைப்பு காரணமாக ஏற்பட்ட லேசான மாரடைப்பு என்பதால் பிரச்னையில்லை என்றும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சரோஜ் மண்டல் தலைமையிலான 3 டாக்டர்கள் குழுவினர், ரத்தக் குழாய் அடைப்புகளை போக்கும் ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை அளித்தனர். ஒரு அடைப்பை நீக்குவதற்காக ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது. நிலைமையை பொறுத்து மேற்கொண்டு ஸ்டென்ட் பொருத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.  தற்போது கங்குலியின் உடல்நிலை சீராக இருந்தாலும், மேலும் சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் இருப்பது அவசியம்’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கும் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ செய்யப்பட்ட நிலையில், இப்போது நலமுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ‘கங்குலி விரைவில் குணமடைய வேண்டுவதாக’ மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெகதீப் தாங்கர், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட ஏராளமானவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்….

You may also like

Leave a Comment

1 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi