திருச்சி, ஏப்.4: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நாச்சிகுளம் பகுதி சேர்ந்தவர் முத்து சரவணன் (34). இவர் நேற்று திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு அரசு பஸ்ஸில் வந்தார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தவுடன் பயணிகள் அனைவரும் பஸ்சிலிருந்து கீழே இறங்கி சென்றனர். ஆனால் முத்து சரவணன் மட்டும் இறங்காமல் சீட்டில் அமர்ந்திருந்தார். கண்டக்டர் அருகில் சென்று முத்துசெல்வனை பார்த்த போது, அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை உடனே ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து தகவலறிந்த கண்டோன்மென்ட் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.