திருவொற்றியூர்: வேலூரை சேர்ந்தவர்கள் மைக்கேல், ஜேசுராஜ், லிங்கமூர்த்தி. நண்பர்களான இவர்கள், தண்டையார்பேட்டையில் இருந்து தடாவில் உள்ள அருவிக்கு சுற்றுலா செல்ல நேற்று வாடகைக்கு கார் எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். டிரைவர் மெய்ஞானம் என்பவர் காரை ஓட்டினார். மதியம் ஒரு மணிக்கு மாதவரம் ரெட்டேரி அருகே சென்றபோது, காரின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது.உடனே காரை நிறுத்திவிட்டு 4 பேரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த மாதவரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். …