Saturday, May 18, 2024
Home » ஓடிப்போ புற்றுநோயே!

ஓடிப்போ புற்றுநோயே!

by kannappan

புற்றுநோய் இன்று உலகையே அச்சுறுத்தும் தொற்றா நோய்களில் முதலிடம் வகிப்பது இதுதான். எந்தெந்த உணவுப் பொருட்கள் புற்றுநோய்களுக்கு எதிராகப் போராடும் என்று நிபுணர்கள் சில உணவுகளைப் பரிந்துரைக்கிறார்கள். இவை ஒவ்வொன்றும் வந்த பின் காப்பதைவிடவும் வரும் முன் காப்பதில் எக்ஸ்பர்ட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மஞ்சள்புற்றுநோய் செல்களை அழிப்பதில் மஞ்சள் முதன்மையானது. இதில் உள்ள பாலிஃபீனால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது. மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற பொருள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. புற்றுநோய் உருவாகக் காரணமான புண்களை ஆற்றும் சக்தி மஞ்சளுக்கு உண்டு.மிளகுமிளகில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள் மற்றும் தயமின், ரிபோஃபிளேவின், நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளன. மிளகில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிளகில் உள்ள வேதிப்பொருட்கள், நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கின்றன. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் மிளகுக்கு உண்டு.எள்ளுஎள்ளில் அதிக அளவுத் தாமிரமும் கால்சியமும் உள்ளன. வைட்டமின் பி மற்றும் இ, மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம், புரதச்சத்து போன்றவையும் உள்ளன. தேன் மற்றும் எள்ளை ஒன்றாகக் கலந்து, தினமும் சாப்பிட்டுவர, தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் வயிற்றுச் சுவரைப் பாதுகாக்கும். எள் வயிற்றில் உள்ள புண்ணைக் குணமாக்கும். இதில் உள்ள துத்தநாகம் தோல் புற்றுநோயைத் தடுக்கும்.இஞ்சிஇஞ்சி பசியைத் தூண்டும்; உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து, குடலில் உள்ள வாயுவை நீக்கும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமைப் பெருகும். இஞ்சியில் உள்ள காரமான உட்பொருட்களான ஜிஞ்சரால், பாராடோல், ஷோகால் போன்றவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அவற்றை அழிக்கவும் செய்கின்றன. இஞ்சிச் சாறு புற்றுநோய் வராமல் தடுக்கிறது; குறிப்பாக, ஆண்களுக்கு ஏற்படும் ப்ரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கிறது.சோளம்சோளத்தில் அதிக அளவு மாவுச்சத்தும் நார்ச்சத்தும் அடங்கியுள்ளன. இவை, உடலுக்குத் தேவையான எனர்ஜியை தருகின்றன. இதில் உள்ள புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பி கரோட்டின், தயமின் மற்றும் நியாசின் உடலில் உள்ள உப்பைக் கரைக்கும். ரத்தசோகையைக் குணப்படுத்தும்; புற்றுநோய் செல்களின் பாதிப்பைத் தடுக்கும்.லவங்கப்பட்டைபுற்றுநோய்க் கட்டி உருவாகாமல் இருக்க லவங்கப்பட்டை உதவுகிறது. லவங்கப்பட்டையில் இருக்கும் இயற்கையான ஆன்டிஆக்ஸிடன்ட் நம் உடலுக்குத் தேவையான எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது. நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும், சில வகையான புற்றுநோய்களில் இருந்து நம்மைக் காத்து உதவுகிறது.பூண்டுதினசரி உணவில் தவறாமல் பூண்டு சேர்த்துவருவது குடல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். பூண்டில் உள்ள சல்ஃபர் சேர்மங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள பைட்டோ ரசாயனங்களுக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்கொண்டவை. மேலும், புற்றுநோயால் வயிற்றில் ஏற்படும் கட்டிகளைக் குறைக்க பூண்டு உதவுகிறது.கிரீன் டீ, பிளாக் டீகிரீன் மற்றும் பிளாக் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்கள் பெருகுவதைத் தடுக்கிறது. டீ, காபியில் உள்ள ‘காஃபின்’ க்ரீன் டீயில் இல்லை. க்ரீன் டீயில் உள்ள கேட்டசின் என்ற பொருள் நுரையீரல், மார்பு, ப்ரோஸ்டேட், குடல் புற்றுநோய்களைத் தடுக்கும். குறிப்பாக, க்ரீன் டீ சிறுநீர்ப்பைப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் சருமப் புற்றுநோயைத் தடுக்கும்.வெங்காயம்வெங்காயத்தில் சல்ஃபர் உள்ளது. புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம். வெங்காயத்தில் உள்ள அல்லிசின் என்ற வேதிப்பொருள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் பெற்றது. மேலும், வெங்காயத்தை வேகவைத்துச் சாப்பிடு வதைவிட பச்சையாகச் சாப்பிடுவது நல்லது.சிட்ரஸ் பழங்கள்எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் நிறைந்த பழவகைகளில் காணப்படும் மோனோடேர்ஃபின்கள் புற்றுநோய் உருவாகும் கார்சினேஜன்களை அழிக்கும். நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்து உள்ள சிட்ரஸ் பழச்சாறுகள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். வாய், தொண்டை மற்றும் வயிற்றில் வரும் புற்றுநோய்களை சிட்ரஸ் பழங்கள் தடுக்கும்.வெங்காயத்தாள்வெங்காயத்தாளில் உள்ள அதிக அளவிலான சல்ஃபர் பல நன்மைகளைக் கொண்டது. வைட்டமின் ஏ, இ, சி, கே, தயமின், தாமிரம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கார்போஹைட்ரேட், பெருங்குடல் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

You may also like

Leave a Comment

sixteen + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi