கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சொத்துகுவிப்பு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய 10ம் தேதி மதுக்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் 29 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 4 பத்திரங்கள் பிழை திருத்தம் செய்யப்பட்டுள்ளது என சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக சார் பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்தபோது மகாலிங்கம் என்பவர் பெயரில் திருமலையாம்பாளையத்தில் உள்ள 29 மனையிடங்கள் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. தலா 3 அல்லது 4 சென்ட் அளவு இருக்கும். சந்தை மதிப்பு ரூ.2 கோடிக்கு குறைவாக இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து மகாலிங்கம், எஸ்.பி. வேலுமணியின் உறவினரா?, இருவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?, மகாலிங்கத்தின் வருவாய் பின்புலம் என்ன? என்பது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. …