புதுச்சேரி: அரசு கட்டமைப்பை பள்ளி குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி ஐஸ்வர்யா ஒரு நாள் ஆட்சியராக பணியாற்றினார். அரசு கட்டமைப்பை குழந்தைகள் அறிய ஆட்சியருடன் ஒரு நாள் நிகழ்வு புதுச்சேரியில் தொடங்கியது. முதலாவதாக புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் ஐஸ்வர்யா என்ற மாணவியை ஒரு நாள் ஆட்சியராக பணியாற்றியவர் ஆவார், ஆட்சியர் மணிகண்டனுடன் இன்று ஒரு நாள் இருந்து அனைத்து பணிகளையும் கவனித்தார். மாவட்ட ஆட்சியர் பணி கடினமானது என்று அறிந்து கொண்ட மாணவி ஐஸ்வர்யா செய்தியாளர்களிடம் பின்னர் தெரிவித்தார். முதல் மாணவியாக தேர்வு செய்யப்பட்டு ஆட்சியர் அலுவலகம் சென்ற ஐஸ்வர்யா ஆட்சியர் மணிகண்டனுடன் அமர்ந்து மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்றார். ஆட்சியர் அலுவலக செயல்பாடு குறித்து நேரில் பார்வையிட்ட ஐஸ்வர்யா ஆட்சியருடன் இணைந்து களஆய்வு பணிக்கும் சென்றார். பின்னர் சட்டப்பேரவைக்கு ஆட்சியருடன் மாணவி வந்தார். அங்கு சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்தை சந்தித்தார். சட்டப்பேரவை வளாகத்தையும், பேரவைக் கூட்டம் நடக்கும் இடத்தையும் பார்த்தார்….