சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்திருக்கிறது. ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக ஏற்கனவே எடுத்த நிலையில் இருந்து பழனிசாமி தரப்பு மாற்றம் செய்துள்ளது. பொதுக்குழு அங்கீகரிக்காததால் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக ஏற்கனவே பழனிசாமி தரப்பு அறிவித்திருந்தது. கட்சி விதிகளை திருத்த செயற்குழுவுக்கு அதிகாரம் இல்லை எனவும் பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. …