ஒரத்தநாடு, ஏப். 17: ஒரத்தநாடு தீயணைப்பு நிலையம் சார்பாக தீ தொண்டு மற்றும் வார விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் ஒரத்தநாடு நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா சிலை மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தீத்தொண்டு நாள் மற்றும் வார விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்யப்பட்டது. ஒரத்தநாடு தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் அனந்த சைனன் தலைமையில் நடைபெற்றது.