ஒரத்தநாடு, மார்ச்24: ஒரத்தநாடு அருகே கோயில் உண்டியலை உடைத்து ரூ.25000 காணிக்கை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவோணம் அருகேயுள்ள ஊரணிபுரத்தில் காரியாவிடுதி செல்லும் வழியில் செட்டியப்பன் கோயில் உள்ளது. சொந்தமான உண்டியல் ஊரணிபுரத்தில் இருந்து காரியாவிடுதி செல்லும் வழியில் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருவோணம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ. 25000 க்கு மேற்பட்ட தொகை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.