ஒட்டன்சத்திரம், ஜூன் 11: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் ஒட்டன்சத்திரம் வட்டாரத்தை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் பெயர் நீக்கல், பெயர் சேர்த்தல் முகவரி மாற்றம் குடும்ப அட்டை மாற்றுதல் உள்ளிட்ட பொதுமக்களின் நூற்றுக்கு மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.