நெல்லை, அக்.5: ஏர்வாடி அருகே திருட்டு வழக்கில் நாங்குநேரி நீதிமன்றத்தில் வழக்கில் கடந்த ஒன்றரை மாதங்களாக ஆஜராகாத வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள இளைய நயினார்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (58). இவரை கடந்த 2015ம் ஆண்டு திருட்டு வழக்கில் ஏர்வாடி போலீசார் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கு நாங்குநேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக முத்துப்பாண்டி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனையறிந்த நாங்குநேரி நீதிமன்றம் முத்துப்பாண்டியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. இதன் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிந்து முத்துப்பாண்டியை கைது செய்து நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.