திருச்செங்கோடு, ஏப்.12: எலச்சிபாளையம் ஒன்றியம் அகரம் ஊராட்சியில் உள்ள ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விஏஓ சுகந்தி, நேற்று ஏரிக்கு சென்று பார்த்தபோது, அங்கு செம்மண் அள்ளிக்கொண்டு இருந்தனர். இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த விஏஓ சுகந்தி, எலச்சிபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தார். மேலும் அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், லாரி டிரைவரான அகரத்தை சேர்ந்த வடிவேல்(46) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சுரேஷ்பாபு, வடிவேலுவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi