ராசிபுரம், பிப்.13: வெண்ணந்தூர் அருகே சின்ன ஏரியில் அனுமதியின்றி ெசம்மண் அள்ளிய 2 டிப்பர் லாரி, பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர்கள் 2 பேரை கைது செய்தனர். ராசிபுரம் அடுத்த அத்தனூர் சின்னஏரியில், அனுமதியின்றி மண் அள்ளி கடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றது. இதனை அடுத்து வருவாய்த் துறையினர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகளை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அதிகாரிகள் டிரைவர்களை மடக்கிப் பிடித்தனர்.செம்மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், 2 டிப்பர் லாரி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வெண்ணந்தூர் ேபாலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், டிப்பர் லாரியின் டிரைவர்களான அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி(21) மற்றும் சக்திவேல்(36) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏரியில் செம்மண் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்
previous post