அஞ்சுகிராமம், ஏப்.2: மயிலாடி எஸ்.எம். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஆனந்த் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் லிங்கேஸ்வரன், ஜெகன் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஷீபா டேனி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி, மழலை மாணவ, மாணவியரை வாழ்த்திப் பேசினார். பின்னர், மழலையருக்குப் பட்டம் வழங்கிப் பாராட்டினார். அதனைத் தொடர்ந்து மழலைக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சுவாமி நாதன், துணை முதல்வர் ராதிகா ஜெகன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.