ஈரோடு, மே 14: ஈரோடு அடுத்த கொங்கம்பாளையத்தில் உள்ள எஸ்விஎன் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளி அளவில் எஸ்.கீர்த்தனா, ஜி.கே.தபஸ்வி ஆகிய இரண்டு மாணவிகள் 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், ஆர்.ஹர்ஷிதா என்ற மாணவி 488 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், பி.என்.சந்திரேஷ், வி.ஞானவிஷ்வா, ஐ.வசந்தராஜ் ஆகிய மூன்று மாணவர்கள் 487 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவர் சின்னசாமி, தாளாளர் மல்லி.பி.பெரியசாமி, செயலாளர் தாமரைச்செல்வன், பொருளாளர் பிரகாஷ், முதல்வர் தர்மராஜ், ஆசிரிய இயக்குநர்கள், ஆசிரியைகள் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
எஸ்விஎன் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
previous post