Friday, May 3, 2024
Home » எஸ்எஸ்விஎம் பள்ளி 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை

எஸ்எஸ்விஎம் பள்ளி 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை

by Suresh

மேட்டுப்பாளையம், மே 14: மேட்டுப்பாளையம் எஸ்எஸ்விஎம் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் 10, 12ம் வகுப்பு அரசு பொதுதேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.மேட்டுப்பாளையம் எஸ்எஸ்விஎம் சிபிஎஸ்இ பள்ளி 12ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்டிபடி மாணவி பார்கவி 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவர் குகன் 491 மதிப்பெண்களுடன் 2ம் இடமும், மாணவி நிவேதா 489 மதிப்பெண்களுடன் 3ம் இடமும் பிடித்துள்ளனர். பாடவாரியாக கணிதவியலில் ஒருவர், வேதியலில் இருவர், கணினி அறிவியலில் 5 பேர், கணக்குப்பதிவியிலில் ஒருர், தொழில்நுட்ப கல்வியில் 3 பேர் என 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 400 மதிப்பெண்களுக்கு மேல் 242 பேர் பெற்றுள்ளனர்.

இதேபோல் 10ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுதேர்வில் பள்ளி அளவில் மாணவி மயூரி 494 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி தாரிகா 489 மதிப்பெண்களுடன் 2ம் இடமும், மாணவி பிரகலதா, மாணவர் தருன்குமர் ஆகியோர் 487 மதிப்பெண்ணுடன் 3ம் இடமும் பிடித்துள்ளனர். மேலும் தமிழில் 11 பேர் கணக்கில் 3 பேர், அறிவியலில் ஒருவர் என 15 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 400 மதி்பெண்களுக்கு மேல் 270 மாணவர்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன்தாஸ் மற்றும் பள்ளி செயலர் மோகன்தாஸ், ஆசிரியர்கள் சக மாணவர்கள் பாராட்டினார்கள்.

You may also like

Leave a Comment

seven + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi